வெள்ளி, 15 மே, 2020



காதலித்துப்பார் 

பெற்றோரை காதலித்துப்பார்
பாசம் வரும் !
உடன்பிறப்புகளை
காதலித்துப்பார்
அக்கறை வரும் !
ஆசிரியர்களை
காதலித்துப்பார்
ஞானம் வரும் !
தொழிலை காதலித்துப்பார்
அனுபவம் வரும்!
திறமையை
காதலித்துப்பார்
சிந்தனை வரும் !
முதியவர்களை
காதலித்துப்பார்
போதனைகள் வரும் !
பெண்ணை
காதலித்துப்பார்
மரியாதை வரும் !
ஆண்களை
காதலித்துப்பார்
உரிமை வரும் !
குழந்தையை
காதலித்துப்பார்
புதிய யுக்திகள் வரும் !
நண்பர்களை
காதலித்துப்பார்
உண்மையான அன்பு வரும் !
எதிரியை
காதலித்துப்பார்
சாமர்த்தியம்  வரும் !
கடவுளை
காதலித்துப்பார்
புதிய பாதைகள்  வரும் !
உன்னை
காதலித்துப்பார்
இவையெல்லாம்
உன்னருகில் வரும்
சமூகமாக....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொங்கல் கவிதை

நஞ்சை நிலத்தில் நல்லதொரு விடியலைத் தேடி  நம் நெஞ்சங்களை இனிமையாய் எத்திக்கும் நம் சொந்தங்களோடு எண்ணமெல்லாம் நிறைவேற தஞ்சம் அடைய வருக...