சனி, 16 மே, 2020

பொங்கல் கவிதை


நஞ்சை நிலத்தில்
நல்லதொரு விடியலைத் தேடி 
நம் நெஞ்சங்களை இனிமையாய்
எத்திக்கும் நம் சொந்தங்களோடு
எண்ணமெல்லாம் நிறைவேற
தஞ்சம் அடைய
வருகிறதோ
இந்த பொங்கல்....

புதியதாய் உதயமாகி
புனிதமாய் உதயமாகும்
புன்சிரிப்பாய் உதயனோடு

பொங்கலை கொண்டாடுவோம்
பொன்னான சந்தோசங்களை

என்றும் நிலைத்திருக்க
எண்ணமெல்லாம் ஈடேற

எந்த சூழ்நிலையிலும்
மனம் மாறாத
அள்ள அள்ள அமுதாய்
அனைவரும் ஒன்று கூடி

பகைமையை மறந்து
பல்லாண்டு சிறந்து

வசந்த விடியலை
வாழ்க்கையின் விடிவெள்ளி
என்றென்றும்
ஒளிவீச  ஒளிமயமான
எதிர்காலத்தை நோக்கி

அமைதியை நிலைநிறுத்தி
ஆனந்தத்தை உயர்த்தி
பேரானந்தமாய்

பெரியதாய் மதிக்கப்படும்
பெருமை பொங்கலை
பேரின்பம் மாறாமல்
கொண்டாடுவோம்...
இன்பங்களை
பரிசளிப்போம்

வாழ்வெல்லாம்
இனிப்பாய்
மாறுவதற்காக....

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Man Of Woman



Man is equal to Wife Of MAN
 W- wisdom in nature 
 I-Interpersonal in Nature  
 F-Friendly in nature 
 E-Elegant in Nature

Common with pictures




கவிதைகள்



கூடியிருக்கும் போது 
வருவதில்லை 
தனிமையில் 
வருகின்றாள் 
சிந்தனைதுளியாய்…. 


வினாவின் வருகைக்காக 
 கனவாய் 
விடையளிக்க வருகிறது 
கற்பனையாய்
கவியுலகை  ஆள  வருகின்றது கவிநடையில்

இழந்த சிந்தனைகள்



இழப்பிற்கு 
பின்னால் தான் 
இழந்த சிந்தனைகள் 
இலட்சிய சாதனைகளாக 
முன்னால் தானே 
மலரும் . 

வரதட்சணை




பெண்ணே ! 
உமது கற்பின் 
மகத்துவத்திற்கு
ஈடாகுமோ 
இந்த 
லட்ச அர்ச்சனைகள் 
லட்சார்ச்சனை

மனிதனின் வாழ்நாள்


1,00,00,000  ரூபாய் கிடைத்தது
சமூகம் தரும் அந்தஸ்தில் !
10,00,000 ரூபாய் கிடைத்தது
உறவுகள் தரும் விசுவாசத்தில் !
1,00,000 ரூபாய்   கிடைத்தது
 எதிரிகள் தரும் போலிநடிப்பில் !
10,000  ரூபாய் கிடைத்தது
 குடும்பம் தரும் சந்தோஷத்தில் !
1000  ரூபாய் கிடைத்தது
ஆடம்பரம் தரும் பூரிப்பில் !
100 ரூபாய் கிடைத்தது
நண்பர்கள் தரும் உல்லாசத்தில்!
10  ரூபாய் கிடைத்தது
உணர்வுகள் தரும் உற்சாகத்தில் !
1 ரூபாய்  கிடைத்தது
சாம்பல் தரும் நெற்றிப்பொட்டில் !

பொங்கல் கவிதை

நஞ்சை நிலத்தில் நல்லதொரு விடியலைத் தேடி  நம் நெஞ்சங்களை இனிமையாய் எத்திக்கும் நம் சொந்தங்களோடு எண்ணமெல்லாம் நிறைவேற தஞ்சம் அடைய வருக...